Wednesday, October 4, 2017

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் செய்த ஆச்சரியம்.

*@Gallellanews1st*


பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டவுன்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி ஆரோன் பைரோஸ் என்ற ஆணும், ஜெசிகா கோம்ஸ் என்ற பெண்ணும் பிறந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 9ம் திகதி தங்களது 27வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானதாக உள்ளது.

இருவரும் மருத்துவமனையில பிறந்தாலும், வெவ்வேறு நகரங்களில் வளர்த்துள்ளனர். பின்னர் இருவரும் தங்கள் உயர்நிலை பள்ளி நண்பர்கள் மூலம் சந்தித்து நட்பாகியுள்ளனர்.

ஆரோன் மற்றும் ஜெசிகா இருவரும் வாகன சாரதி பயிற்சி நிலையத்தில் ஒன்றாக சேரும் போது தங்களின் அடையாள அட்டை மூலம் அவர்கள் ஒரே நாளில் பிறந்தமை தெரியவந்துள்ளது

இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். முதல் பார்வையிலேயே தங்களுக்குள் காதல் வந்துவிட்டதாக ஜெசிகா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

*Www.gallellanews1st.blogspot.com*
*Www.rahmanazeez.wordpress.com*

No comments:

Post a Comment

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் செய்த ஆச்சரியம்.

*@Gallellanews1st* பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற...