ஈத் முபாரக்… தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★றஹ்மான் அப்துல் அஸீஸ்★
ஒரு மாதமாய்
இரவில் நின்று தொழுதோம்… ஸஜூதில் விழுந்து அழுதோம்…
வஹியோடு உறவாடினோம்… பசியோடு பண்பட்டோம்…
வீண் வம்புகளை விட்டு விலகியிருந்தோம்.
வீடு தேடிவந்த சர்ச்சைகளையும் சமாதானமாய் தீர்த்து வைத்தோம்.
நடுநிசியில்… கல்புக்குள் பல்புகள் போட்டோம்.
கரமேந்தி இறைவனிடம் எல்லாம் கேட்டோம்!
புலன்களுக்கு புடம்போட்டோம்!
கடிவாளமிட்டு பயிற்சி பெற்றோம்!
பொறுமை கொண்டோம்…
பொல்லாங்கு தவிர்த்தோம்…
தற்காப்பு கேடயம் பெற்றோம்…
எதிரியை வீழ்த்தும் தக்வா எனும் பலமும் பெற்றோம்…
மாதம் முடிந்தாயிற்று…
சிறைப்பட்ட ஷைத்தான் சினத்தோடு வருவான்.
கனரக ஆயுதங்களோடு போர்முரசு கொட்டுவான்.
ரமழான் தந்த தக்வாவும் பயிற்சியும் பண்பாடும்
செழிப்பாக இருக்கும் வரை போராட்டத்தில் வெற்றி நமக்கே!
(இன்ன லில்முத்தகீன மபாஸா)
இது ஒரு வெற்றிப் பெருநாளாக அமையட்டும்!
ஈத் முபாரக்… தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!
💫 Rahman Abdul Azeez💫
💫Gallellanews1st💫
25.06.2017
No comments:
Post a Comment